பரப்புத்திட்டப் பிரிவு

சென்னை மாநகராட்சி, 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 214 கிராமங்களைக் கொண்ட 10 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 1186 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னைப் பெருநகர்ப் பகுதியை தனது அதிகார எல்கைக்குட்பட்ட பகுதியாக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கொண்டுள்ளது. வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளில் சொல்லியபடி சென்னைப் பெருநகர்ப் பகுதியில் வளர்ச்சியினை முறைப்படுத்துதல், பரப்புத் திட்டப் பிரிவின் முக்கிய செயல்பாடாகும். அதன்படி பரப்புத் திட்டப் பிரிவு கீழ் காணும் முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

  1. திட்ட அனுமதி வழங்குதல்.
  2. மனைப் பிரிவு மற்றும் சிறிய நிலப்பகுதிக்கான மனை உட்பிரிவுகளுக்கு ஒப்புதல் அளித்தல்.
  3. நில உபயோகப் பயன்பாடு மாறுதலுக்கு ஒப்புதல் அளித்தல்.
  4. விதிகள் பற்றிய சந்தேகங்கள் தொடர்பாக கலந்துரையாடுதல் மற்றும் ஆலோசனைகளைப் பொதுமக்களுக்கு வழங்குதல்.
  5. உள்ளாட்சி நிறுவனங்களால் வழங்கப்படும் திட்ட அனுமதிகள் மற்றும் அனுமதியில்லாத கட்டிடங்கள் மீது எடுக்கப்படும் செயல் நடவடிக்கைகளை, மறு ஆய்வு மூலம் மதிப்பீடு செய்தல்.
  6. செ.பெ.வ.குழுமம் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் திட்ட அனுமதி மறுப்பு ஆணைக்கு எதிராக அரசாங்கத்திடம் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்து குழுமத்தின் கருத்துருவினைச் சமர்ப்பித்தல் மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள திட்ட அனுமதிகளை மறு ஆய்வு செய்தல்.
  7. வரம்பு மீறும் மேம்பாட்டின் மீது வளர்ச்சிக்கட்டுப்பாடு விதிகளை அமுல்படுத்துதல்/ அனுமதியில்லாத மற்றும் விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

கீழ் காணும் செயற்பிரிவுகள் பரப்புத்திட்டப் பிரிவில் உள்ளன: